ADDED : டிச 12, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்புக்குழு (பன்னீர் செல்வம் அணி) செயலாளர் சண்முகம் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி உயர்வை திரும்ப பெறவலியுறுத்தி, வரும் 18ம் தேதி, திருப்பூரில் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தலின் பேரில் இந்த போராட்டத்தில் எங்கள் அமைப்பு பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

