/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கந்த சஷ்டி விழா நிறைவு மலைக்கு திரும்பிய சுவாமி
/
கந்த சஷ்டி விழா நிறைவு மலைக்கு திரும்பிய சுவாமி
ADDED : நவ 10, 2024 04:41 AM

திருப்பூர் : சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை அடுத்து, நேற்று சாமி திருமலையை அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. உற்சவமூர்த்தி கோவிலை வலம் வந்து மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சாமி கோவிலுக்கு சென்றார்.
தினமும் காலை மற்றும் மாலை அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடந்தது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா, 7ம் தேதி இரவு நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி திருமலைக்கு எழுந்தருளல் நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.