/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா வித்யாலயாவில் தமிழ்ப் புத்தாண்டு விழா
/
விவேகானந்தா வித்யாலயாவில் தமிழ்ப் புத்தாண்டு விழா
ADDED : ஏப் 15, 2025 11:43 PM

திருப்பூர்; திருப்பூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயாவில், தமிழ்ப் புத்தாண்டு சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சித்திரை திருவிழா நடந்தது. அபிஷேக ஆராதனையுடன் வேல் பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், ஏஞ்சல் பொறியியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் ராமசாமி, பள்ளி நிர்வாகி மாசேதுங் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தாளாளர் சுவாமிநாதன், விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தார்.
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் என, பலர் பங்கேற்றனர். சாந்தி மந்திரத்துடன் விழா நிறைவு பெற்றது. அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

