ADDED : நவ 17, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள், ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடைபெற்றன.
பி.எட்., முடித்த பட்டதாரிகளுக்கான தாள் - 2 தேர்வு நேற்று நடைபெற்றது. 23 மையங்களில், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடைபெற்றது. நேற்றைய தேர்வுக்கு விண்ணப்பித்த 6 ஆயிரத்து 890 பேரில், 6 ஆயிரத்து 5 பேர் தேர்வு எழுதினர்; 835 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

