sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மாற்றம்

/

கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மாற்றம்

கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மாற்றம்

கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மாற்றம்


ADDED : ஏப் 25, 2025 07:48 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் பழைய நுழைவு வாயில் அருகே பணிகள் நடப்பதால், பஸ் உள்ளே நுழைந்து, வெளியே செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி, கட்டும் பணி, 26 கோடி ரூபாயில், 2022ம் ஆண்டு துவங்கியது. வணிக வளாக கடைகள், பஸ் 'ரேக்' கட்டும் பணி நீண்ட இழுபறிக்கு பின், முடிவடைந்துள்ளது. பஸ்கள் நின்று புறப்பட்டு செல்ல ஏதுவாக, 28 'ரேக்'குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தரைத்தளம் மற்றும் பஸ்கள் வந்து செல்லும் சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கியது. பஸ் உள்ளே செல்லும், வெளியே வரும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, பஸ் ஸ்டாண்டுக்குள் வந்த பஸ்கள், இனி, தெற்கு நுழைவாயில் வழியாக உள்ளே வந்து, அதே வழியில் வெளியே செல்ல வேண்டும். வடக்கு நுழைவாயில் அருகே தார்சாலை மற்றும் கற்கள் பதிக்கும் பணி, 'ஆர்ச்' கட்டும் பணி முடியும் வரை இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

---

வடக்கு நுழைவாயில் அருகே பணிகள் நடைபெற்று வருவதால், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் உள்ளே நுழையவும், வெளியே வரவும், தெற்கு நுழைவாயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.

அறிவிப்பு பலகை அவசியம்

பஸ் ஸ்டாண்ட் பஸ் நுழையுமிடம் மாற்றம் தொடர்பாக திருப்பூர் கிளையில் பணிபுரியும் டிரைவர், நடத்துனருக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில், திருநெல்வேலி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பிற மண்டலங்களில் இருந்து வரும் டிரைவர், நடத்துனருக்கு இத்தகவல் தெரியவில்லை. வடக்கு நுழைவு வாயில் உள்ள பெருந்தொழுவு சாலை திரும்பும் ரவுண்டானா வரை வந்து விட்டு பின் 'யு டர்ன்' எடுத்து, திரும்பி, தெற்கு நுழைவு வாயில் சென்று, பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைகின்றனர். பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மாற்றம் குறித்து, 100 மீ., முன்பும், பஸ் ஸ்டாண்ட் முன்பும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டியது அவசியம்.








      Dinamalar
      Follow us