ADDED : டிச 25, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வெள்ளகோவில் அருகே  அறநிலையத்துறைக்குட்பட்ட நாட்டராயசாமி கோவிலில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது.
அறநிலையத்துறை உதவி கமிஷனர் தனசேகரன் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், ஆய்வாளர் சதீஷ் செந்தில்வேல், கோவில் செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதில், 4 லட்சத்து, 82 ஆயிரத்து, 387 ரூபாய் மற்றும் 32 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. இவை கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

