sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ

/

ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ

ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ

ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ


ADDED : டிச 27, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வெள்ளகோவிலில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், தீத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 51. இவருக்கு சொந்தமான 'ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்'(கழிவுப்பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் ஆலை), சேரன் நகரில் உள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நேற்று காலை மில்லின் ஒரு பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. தகவலறிந்து, வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில், இயந்திரம், பஞ்சு என, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தன. தீவிபத்துக்கான காரணம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us