sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதுவும் கடந்தது; இதுவும் நடந்தது

/

அதுவும் கடந்தது; இதுவும் நடந்தது

அதுவும் கடந்தது; இதுவும் நடந்தது

அதுவும் கடந்தது; இதுவும் நடந்தது


ADDED : மே 18, 2025 11:11 PM

Google News

ADDED : மே 18, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; கடந்தாண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் கடுமையாக சரிந்ததால் விமர்சிக்கப்பட்ட அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி, ஒரே ஆண்டில், இதைத் தவிடுபொடியாக்கி 50 சதவீதத்தில் இருந்து 81 சதவீதத்தைக் கடந்து தேர்ச்சி சதவீதத்தில் சாதித்துள்ளது.

அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில், அரசுப்பள்ளிகளில், 50.44 சதவீதத்துடன் குறைந்த தேர்ச்சி சதவீதத்தைப் பெற்றிருந்தது.

மொத்தம் 205 மாணவர், 134 மாணவியர் என, 339 பேர் தேர்வெழுதியதில், 168 பேர் தேர்ச்சி பெறவில்லை.

ஒரே பள்ளியில், 168 பேர் தேர்ச்சி பெறாததால், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 2023ல், மாநில அளவில், 11வது இடத்தில் இருந்த திருப்பூர், பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடத்தை, கடந்தாண்டு பெற்றதாக மாவட்ட கல்வித்துறையில் விவாதம் எழுந்தது.

கலெக்டர், மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் தனித்தனியே ஆய்வு நடத்தி, ''சிறப்பு வகுப்பு தொடர்ந்து நடத்துங்கள்; அடுத்தாண்டு நிலையை மாற்றிக்காட்டுங்கள்,'' என, அறிவுரை வழங்கினர்.

நடப்பாண்டு, 149 மாணவர், 155 மாணவியர் என, 304 பேர் தேர்வெழுதினர். இதில்,116 மாணவர், 132 மாணவியர் என, 248 பேர் தேர்ச்சி பெற்றனர்; 33 மாணவர், 23 மாணவியர் என, 56 பேர் தேர்ச்சி பெறவில்லை.

மாணவர், 77.85 சதவீதமும், மாணவியர், 85.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு, 48.78 சதவீத மாணவரும், 52.99 சதவீத மாணவியரும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.நடப்பாண்டு மாணவர் தேர்ச்சி, 29.07 சதவீதமும், மாணவியர் தேர்ச்சி, 32.17 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனால், மொத்த தேர்ச்சிசதவீதம், 50.44ல் இருந்து, 31.14 சதவீதம் உயர்ந்து, 81.58 சதவீதமாகியுள்ளது.

எப்படி சாத்தியமானது?

பள்ளியை விட்டு மாணவ, மாணவியர் வெளியே செல்லாமல் இருக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினோம். ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

கடந்தாண்டு நிலையை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். சிறப்பு வகுப்பு களில் ஆசிரியர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்றினர். பெற்றோர் ஆசிரியர் குழு, பள்ளி மேலாண்மை குழுவினர் ஆலோசனைகளை வழங்கினர்.

பொதுத்தேர்வுக்கு மூன்று மாதம் முன்பாக, ஒவ்வொரு மாணவ, மாணவியரையும்தேர்வுக்கு எப்படி தயார்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தினோம். மெல்ல கற்கும்மாணவ, மாணவியருக்கென தனி ஆசிரியர் குழு நியமித்து, அவர்களுக்கு தனியே சிறப்பு வகுப்புகளை நடத்தினோம். அனைத்துஆசிரியர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற முடிந்தது.

- பாபு பிரேம்குமார், தலைமையாசிரியர்,அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம்.






      Dinamalar
      Follow us