sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மை பணியாளர் பாலியல் குற்றச்சாட்டு

/

துாய்மை பணியாளர் பாலியல் குற்றச்சாட்டு

துாய்மை பணியாளர் பாலியல் குற்றச்சாட்டு

துாய்மை பணியாளர் பாலியல் குற்றச்சாட்டு

1


ADDED : பிப் 18, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 18, 2025 11:57 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த துாய்மை பணியாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதில், பெண் துாய்மைப்பணியாளர் ஒருவர் அளித்த மனு:

மடத்துக்குளம் பேரூராட்சியில் 12 ஆண்டு களாக, வீடு வீடாக மக்கும், மக்காத குப்பை தரம்பிரித்து வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். பேரூராட்சியில், மேஸ்திரி ஒருவர் (பெயர் குறிப்பிட்டுள்ளார்) என்னிடம் ஒருமையிலும், இரட்டை அர்த்தங்களிலும் பேசுகிறார். பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். வேலையைவிட்டு நீக்கிவிடுவதாக மிரட்டுகிறார்.

நான் வேலைக்கு செல்லும் இடத்துக்கு தொடர்ந்து வந்து, தகாத செயல்களில் ஈடுபடுகிறார். கவுன்சிலர் ஒருவர், பாலியல் ரீதியாக மன உளைச்சல் ஏற்படுத்திவருகிறார்.

கணவனை இழந்து மகனுடன் வாழ்ந்துவரும் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எனக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us