sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிறிஸ்தவர் தவக்காலம் துவங்கியது 

/

கிறிஸ்தவர் தவக்காலம் துவங்கியது 

கிறிஸ்தவர் தவக்காலம் துவங்கியது 

கிறிஸ்தவர் தவக்காலம் துவங்கியது 


ADDED : பிப் 14, 2024 11:53 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கிறிஸ்தவர்களின் தவக்காலம், சாம்பல் புதன் நிகழ்வுடன், நேற்று துவங்கியது.கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார் என்ற நம்பிக்கை அடிப்படையில், ஆண்டுதோறும், ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, அடுத்த மாதம், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.திருப்பூர், குமார் நகர் புனித ஜோசப் சர்ச், புனித கேத்ரீன் சர்ச், அவிநாசி புனித தாமஸ் சர்ச், லுார்துபுரம் புனித லுார்து அன்னை சர்ச் என, மாவட்டம் முழுக்க உள்ள தேவாலயங்களில், நேற்று, சாம்பல் புதன் நிகழ்வுடன், இப்பெருநாள் துவங்கியது. இடைபட்ட, 46 நாட்கள், தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது.சாம்பல் புதன் தினமாக நேற்று தேவாலயங்களில் திருப்பலி நடத்தப்பட்டு, பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. வரும் நாட்களில் ஆன்மிக மறையுறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஏசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் வகையில், வாரந்தோறும், வெள்ளிக்கிழமைகளில், தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்படும். அடுத்த மாதம், 29ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது; 31ம் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

---

கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் தொடக்கம், சாம்பல் புதன் நிகழ்வுடன் நேற்று துவங்கியது. திருப்பூர், குமார் நகர், புனித சூசையப்பர் சர்ச்சில், நேற்று, பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

ஜெபம்... தவம்... தானம்!

தவக்காலம் என்பது இரக்கம், மன்னிப்பின் காலம்; கடவுளோடு ஒப்புரவாகிற காலம். இந்த தவக்காலத்தில் பக்தர்கள், உபவாசம் இருந்து, ஏசுவின் சிலுவை பாடுகளை தியானிக்க வேண்டும். தீய பழக்கங்கள், தேவையற்ற குணங்களை விட்டொழித்து, புதிய மனிதர்களாக வாழ்வதற்குரிய மனம் திரும்புதலுக்கான காலமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மை செதுக்கி, நம் குணங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழை, எளியோருக்கு உதவ வேண்டும். சாம்பல் புதனன்று, நெற்றியில் சாம்பல் பூசுவதென்பது, வெறுமை, தாழ்ச்சியின் அடையாளம். உலக வாழ்க்கை என்பது நிரந்தரமானது அல்ல; மண்ணில் இருந்து பிறந்த மனிதன் மண்ணுக்கே திரும்புவான் என்பதை நினைவுகூர்வதற்கான நிகழ்வு. ஜெபம், தவம், தானம்...இவை தான், தவக்காலத்தின் அடையாளம்.- அருட்திரு. பிலிப், பங்கு குருபுனித ஜோசப் சர்ச், திருப்பூர்.








      Dinamalar
      Follow us