sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சிகரம் எட்டுவதே நோக்கம்... 'பட்டம்' இதழ் தருமே ஊக்கம்

/

 சிகரம் எட்டுவதே நோக்கம்... 'பட்டம்' இதழ் தருமே ஊக்கம்

 சிகரம் எட்டுவதே நோக்கம்... 'பட்டம்' இதழ் தருமே ஊக்கம்

 சிகரம் எட்டுவதே நோக்கம்... 'பட்டம்' இதழ் தருமே ஊக்கம்


ADDED : டிச 22, 2025 05:12 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

பாடம் சார்ந்த கேள்விகள் தாண்டி, அறிவு, சிந்தனை, படைப்பாற்றல்களை வளர்க்கும் விதம் 'பட்டம்' இதழ் 'வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.

கல்வியில் நவீன தொழில்நுட்பம் வந்தாலும், 'பட்டம்' இதழ் வாசித்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதால் பெறும் அறிவு மனதில் நிலைத்து நிற்கிறது என்கின்றனர் மாணவர்கள்.

பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்று, அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ள, சத்யா ஏஜென்சீஸ்; ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில் 161 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மதிப்பெண் அடிப்படையில் தேர்வான 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.

பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் 'டி' அணி வெற்றி பெற்றது. இந்த அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் பிரணவ்; ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று சிறப்பு பரிசை வென்றனர்.

இந்த இருவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் அனிதா பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us