sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்; துவங்கியது காத்திருப்பு போராட்டம்

/

முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்; துவங்கியது காத்திருப்பு போராட்டம்

முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்; துவங்கியது காத்திருப்பு போராட்டம்

முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்; துவங்கியது காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 30, 2024 01:10 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி குப்பைகள், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ் குமார் தொடர்ந்த வழக்கில், பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கும் பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மாநகராட்சி சார்பில், தொடர்ந்து, பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி சதீஷ் குமார், கடந்த 23ம் தேதி இரவு முதல் பொங்குபாளையம் பாபுஜி நகர் விநாயகர் கோவில் அருகில் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கினார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், குப்பை கொட்டுவதை நிறுத்தக்கோரியும் பொங்குபாளையம் ஊராட்சி பகுதி பொது மக்கள் கடந்த 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழர் முன்னணி இயக்க பொது செயலாளர் சரவணன், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், உண்ணாவிரதத்தை முடித்து கொண்டு, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆறு நாட்களாக சதீஷ்குமார் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us