sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; நாளை திருத்தேரோட்டம்

/

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; நாளை திருத்தேரோட்டம்

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; நாளை திருத்தேரோட்டம்

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; நாளை திருத்தேரோட்டம்


ADDED : ஏப் 15, 2025 08:37 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 08:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று அம்மன் திருக்கல்யாண உற்சவமும், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் போடுதல், கொடியேற்றம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வந்து, திருக்கம்பத்திற்கு ஊற்றியும், நேர்த்திக்கடனாக, பூவோடு எடுத்து வந்தும் வழிபட்ட நிலையில், நேற்று இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இன்று அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், பிற்பகல், 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், திருமண பந்தல், மலர் அலங்காரம் என களை கட்டியுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, திருத்தேர் தயார் செய்யும் பணியும், அலங்கரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

நாளை காலை, 6:45 மணிக்கு, மகா சக்தி மாரியம்மன், சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம், 4:15 மணிக்கு, திருத்தேரோட்டமும் நடக்கிறது.

இதற்காக, தேர் வீதிகள் தயார் செய்யப்பட்டு, போலீஸ் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில், திருத்தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரும், 18ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு, குட்டைத்திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

19ம் தேதி, காலை, 10:30 மணிக்கு கொடியிறக்கம், 11:00 மணிக்கு, மகா அபிேஷகம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், தினமும் ஆன்மிக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us