sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்!

/

நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்!

நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்!

நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்!


ADDED : செப் 29, 2024 01:59 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: புரட்டாசி, 2வது சனிக்கிழமையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு சிறப்பு பூஜை துவங்கியது. பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை மற்றும் மாலை நேரங்களில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், காலை மற்றும் மாலை நேரங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவில் வாசலில், பெருமாள் தாசர்கள் சங்கு, சேகண்டி ஒலி எழுப்பியபடி, மயார்பூஜை செய்தனர். பக்தர்கள், அரிசி, பருப்பு, காய்கறிகளை, தலைவாழை இலையில் சமர்ப்பித்து, படிபூஜை செய்து வழிபட்டனர்.

மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவில், கருலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.

வேலம்பட்டி வரதராஜ பெருமாள்கோவில், பெருந்தொழுவு பெருமாள் கோவில், மங்கலம் மற்றும் பெருமாநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில்.

கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், வேட்டுவபாளையம் - அக்ரஹாரப்புத்துார் காரணப்பெருமாள் கோவில், சாமளாபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் என, அனைத்து பெருமாள் கோவில்களிலும், புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.






      Dinamalar
      Follow us