sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆற்றில் அதிகரிக்கும் ஆகாயதாமரை; கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

/

ஆற்றில் அதிகரிக்கும் ஆகாயதாமரை; கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

ஆற்றில் அதிகரிக்கும் ஆகாயதாமரை; கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

ஆற்றில் அதிகரிக்கும் ஆகாயதாமரை; கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை


ADDED : நவ 20, 2024 10:13 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அமராவதி ஆற்றில், பல்வேறு இடங்களில், ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை அருகே அமராவதி அணையிலிருந்து துவங்கும், அமராவதி ஆற்றின் கரையில், நுாற்றுக்கணக்கான கிராமங்கள் அமைந்துள்ளன. வழியோர கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, அமராவதி ஆற்றுக்கு செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் படித்துறைகள் மற்றும் ஆற்றின் கரையோரம் மற்றும் மேடான பகுதிகளில், ஆகாயத்தாமரையின் பரவல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கல்லாபுரம், ருத்ராபாளையம், கொழுமம், மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள், ஆற்றங்கரைக்கு சென்று வருகின்றனர்.

இப்போது, அப்பகுதி முழுவதும், ஆகாயத்தாமரை மட்டுமல்லாது, கரைகளில் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால், ஆற்றின் இயல்பான நீரோட்டம் தடைபடுகிறது; மழைக்காலங்களில், வெள்ளப்பெருக்கு இருக்கும் போது நீரோட்டம் திசைமாறி, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

மேலும், அமராவதி ஆற்றில் பரவலாக காணப்படும், நன்னீர் முதலைகள், இத்தகைய மேடான, புதர் மண்டிய பகுதிகளில், தங்குவது அதிகரித்துள்ளது. நடமாடும் இடங்களில், தென்படும் முதலைகளால், மக்கள் அச்சப்படுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக ஆற்றின் மேடான பகுதிகளிலும், குறைந்தளவு நீர் தேங்கும் இடங்களிலும், ஆகாயத்தாமரை செடிகளை, பொதுப்பணித்துறையினர் மற்றும் அருகிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us