ADDED : அக் 24, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் சுனில்திவாரி 20; பனியன் தொழி லாளி.
வெங்கிட்டாபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த இவரிடம், பைக்கில் வந்த மூன்று பேர், அவரின் மொபைல் போனை பறித்து சென்றனர்.
இது குறித்து சுனில் திவாரி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், மூவரையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
ஊட்டியை சேர்ந்த ஜேம்ஸ் வில்சன், 32, பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த சிவகுமார், 25, சூலுாரை சேர்ந்த அலெக்ஸ், 20 எனமூவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜேம்ஸ் வில்சன் மற்றும் சிவகுமார் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.