sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பாலாலயம்

/

ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பாலாலயம்

ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பாலாலயம்

ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பாலாலயம்


ADDED : ஜன 20, 2025 06:31 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பல்லடம் அருகே, நாரணாபுரம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் பாலாலய கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

பல்லடத்தை அடுத்த, நாரணாபுரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. பல நுாறு ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலை, 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் பராமரித்து, விசேஷ நாட்களில் விழா கொண்டாடி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று கோவில் திருப்பணி துவங்குவதற்கான பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக, காலை, 5.00 மணிக்கு விநாயகர் மற்றும் நவக்கிரக பூஜைகளுடன் பாலாலய விழா துவங்கியது. பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்களில் சுவாமி ஆவாஹனம் செய்யப்பட்டு, சிறப்பு வேண்டி வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, சக்தி வடிவமாக ஸ்ரீநிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பழைய முறைப்படி கருங்கற்களால் கருவறை அமைக்கப்பட்டு, இறைவன் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்ததும், கும்பாபிஷேக விழா தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என, கோவில் நிர்வாகிகள்தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us