நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூரில் நடந்து சென்ற வாலிபரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது.
திருப்பூர், திரு.வி.க., நகர், நாவிதன் தோட்டம் முதல் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 32. அவ்வழியாக நடந்து சென்றார். அப்போது இரண்டு டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில், அரிவாளால் சராமரியாக வெட்டி சாய்த்து, தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலமுருகன் இறந்தார்.
தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள'சிசிடிவி' பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.