sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருவெம்பாவை உற்சவம் நிறைவு நாளை ஆருத்ரா தரிசன விழா

/

திருவெம்பாவை உற்சவம் நிறைவு நாளை ஆருத்ரா தரிசன விழா

திருவெம்பாவை உற்சவம் நிறைவு நாளை ஆருத்ரா தரிசன விழா

திருவெம்பாவை உற்சவம் நிறைவு நாளை ஆருத்ரா தரிசன விழா


ADDED : ஜன 12, 2025 02:15 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி முதல், தினமும் மாலை, 6:30 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை பதிகங்களை, ஓதுவார் மூர்த்திகள் பாடினர். சிவாச்சாரியார்கள் நடராஜர் மற்றும் சிவகாமியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து, திருவெம்பாவை பதிகங்களை பாடி விண்ணப்பித்தனர். நேற்றுடன், மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் நிறைவு பெற்றது.

இன்று மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், நாளை அதிகாலை, 3:00 மணிக்கு, நடராஜர் - சிவகாமியம்மனுக்கு மஹா அபிேஷகமும், காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

ஸ்ரீசிவகாமியம்மன் மற்றும் நடராஜ பெருமான், தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, கோவில் முன்பாக உள்ள, பட்டிவிநாயகரை, 11 முறை வலம் வரும் நிகழ்ச்சி காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. தொடர்ந்து, திருவீதியுலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும் செய்து வருகின்றனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், ஆருத்ரா தரிசனத்தன்று, பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us