/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்
UPDATED : பிப் 24, 2026 07:35 AM
ADDED : பிப் 24, 2026 05:35 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில், 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் வாக்காளராக இடம்பெற்றுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
எட்டு தொகுதிகளில், 2,822 ஓட்டுச்சாவடிகளில், 9 லட்சத்து 44 ஆயிரத்து 178 ஆண்கள்; 10 லட்சத்து 10 ஆயிரத்து 853 பெண்கள்; 252 திருநங்கைகள் என, மொத்தம் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர், இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளனர். எஸ்.ஐ.ஆர்.க்கு பின், டிச. 19ல், வெளியான வரைவு பட்டியலில், எட்டு சட்டசபை தொகுதிகளிலும், மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர் இருந்தனர்.
சுருக்கமுறை திருத்தம் வாயிலாக 94 ஆயிரத்து 8 பேர், சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 920 பேர்; இடம்பெயர்ந்தோர் 18 ஆயிரத்து 595 பேர்; இரட்டைப்பதிவு வாக்காளர் 354 பேர் என, மொத்தம் 19 ஆயிரத்து 869 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்.க்கு முன்பு 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்.ன் போது, 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பெயர்கள்; சுருக்கமுறை திருத்தத்தில், 19 ஆயிரத்து 869 பெயர்கள் என, மொத்தம் 5 லட்சத்து 83 ஆயிரத்து 654 பெயர்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
சுருக்கமுறை திருத்தத்தில், 94 ஆயிரத்து 8 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள இறுதி பட்டியலில், 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் வாக்காளராக இடம்பெற்றுள்ளனர்.
திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டபோது, அரசியல் கட்சியினர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
காங். கட்சியை சேர்ந்த சுந்தர்ராஜன், ''திருப்பூர் தெற்கு தொகுதியில், பாகம் எண் 89, பிரிவு - 1ல், கருவம்பாளையம் பள்ளி வீதி எனவும், பிரிவு - 4ல் கருவம்பாளையம் ஆரம்ப பள்ளி வீதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவம்பாளையம் பள்ளி வீதி என்பதே இல்லை. அதேபோல், மற்ற ஓட்டுச்சாவடிகளில் உள்ள வாக்காளர் பெயர், எங்கள் ஓட்டுச்சாவடிகளில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதும் அதே நிலையே நீடிக்கிறது. இதனை எப்போது தான் சரி செய்யப்போகிறீர்கள்'' என, கூறி கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
'சிறப்பு கவனம் செலுத்தி, சரி செய்யப்படும்' என கலெக்டர் பதிலளித்தார்.
கம்யூ., கட்சியினர், 'வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வந்துவிட்டனரா, பட்டியலை வெளியிடலாமா என, கேட்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு கேட்காமல், கலெக்டர் வந்த உடனேயே பட்டியலை வெளியிடுவது தவறு. தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் முறைப்படி நடக்கவில்லை' என கூறி, கலெக்டரிடம் வாக்குவாதம் செய்யதனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், கடந்த 2025 டிச. மாதம் வெளியான வரைவு பட்டியலில், மொத்தம், 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். தற்போதைய இறுதி பட்டியலில், 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் வாக்காளராக உள்ளனர். சுருக்கமுறை திருத்தத்தில், 94 ஆயிரத்து 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் மொத்த வாக்காளரில், 85 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த வாக்காளர், 7 ஆயிரத்து 57 ஆண்கள், 7 ஆயிரத்து 905 பெண்கள், ஒரு திருநங்கை என, 14 ஆயிரத்து 963 பேர் உள்ளனர். 6 ஆயிரத்து 327 ஆண்கள், 5 ஆயிரத்து 172 பெண்கள் என, மாற்றுத்திறனாளிகள், 11 ஆயிரத்து 499 பேர், முப்படைகளில் பணிபுரியும் சர்வீஸ் வாக்காளர்கள், 172 ஆண்கள், 17 பெண்கள் என, 189 பேர் உள்ளனர். 18 - 19 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களி ல், 20 ஆயிரத்து 553 ஆண்கள், 18 ஆயிரத்து 993 பெண்கள், 4 திருநங்கை என, 39 ஆயிரத்து 541 பேர் உள்ளனர்.
தொகுதிவாரியான இறுதி வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும். தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் வரை, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான படிவங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
- மனிஷ் நாரணவரே, கலெக்டர்.
முதல் வாக்கு!
முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இளம் வாக்காளர்களின் பேட்டி






