sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மண்ணோடு சேர்ந்து மரமும் மாயம்: அதிகாரிகள் மவுனம்

/

மண்ணோடு சேர்ந்து மரமும் மாயம்: அதிகாரிகள் மவுனம்

மண்ணோடு சேர்ந்து மரமும் மாயம்: அதிகாரிகள் மவுனம்

மண்ணோடு சேர்ந்து மரமும் மாயம்: அதிகாரிகள் மவுனம்


ADDED : டிச 07, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்,; பல்லடம் அருகே, கே.அய்யம்பாளையம் குட்டையில், மண்ணோடு சேர்ந்து மரமும் மாயமானது.

நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், விவசாய பயன்பாட்டுக்காகவும், குளம் - குட்டை களில் வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் அனுமதி வழங்கப்பட்டு மண் அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல்லடம் வட்டாரத்திலும், 40க்கும் அதிகமான குளம் - குட்டைகளில், மண் அள்ள அனுமதி வழங் கப்பட்டு, இரண்டு மாதங்கள் முன்பே மண் அள்ளும் பணிகள் முடிந்தன.

அனுமதியின்றி மண் அள்ளினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ், சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே, பல்லடம் அடுத்த, கே. அய்யம்பாளையம் குட்டையில் மண் அள்ளும் பனி ஜோராக நடந்தது.

இதுகுறித்து கே. அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதியிடம் கேட்டதற்கு, 'இதுகுறித்து தெரியவில்லை; தாசில்தாரின் நேரடி அனுமதி பெறபட்டுள்ளது' என்று கூறினார்.

அனுமதியின்றி மண் அள்ளியது குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து, உடனடியாக மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி மண் எடுக்கப்பட்ட குட்டையில், மண்ணோடு சேர்ந்து, பழமையான வேப்ப மரமும் மாயமானது தெரியவந்துள்ளது. குட்டைக்கு நடுவே, ஆலமரம் போன்று வேப்பமரம் நீண்ட காலமாக இருந்தது.

மண் அள்ளும் பணியை தொடர்ந்து, இந்த வேப்ப மரத்தையும் காணவில்லை. இது, இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மண் அள்ளும் பணியின் போதே மவுனம் காத்த வருவாய்த்துறை அதிகாரிகள், இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் என்று தெரியவில்லை.






      Dinamalar
      Follow us