sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தெக்கலுார் அரசுப்பள்ளி மாணவி பேச்சுப்போட்டியில் முதலிடம்

/

தெக்கலுார் அரசுப்பள்ளி மாணவி பேச்சுப்போட்டியில் முதலிடம்

தெக்கலுார் அரசுப்பள்ளி மாணவி பேச்சுப்போட்டியில் முதலிடம்

தெக்கலுார் அரசுப்பள்ளி மாணவி பேச்சுப்போட்டியில் முதலிடம்


ADDED : அக் 24, 2024 11:50 PM

Google News

ADDED : அக் 24, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில், பேச்சுப் போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதில், தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிரக் ஷா, முதல் பரிசு பெற்றார். ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபஸ்ரீ, இரண்டாம் பரிசு, காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிவர்ஷனி, மூன்றாம் பரிசு பெற்றனர்.

பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா, முதலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீசக்தி ஆகியோர் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவி மெர்லின், முதல் பரிசு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மாணவி ரிச்சிகாஸ்ரீ, இரண்டாம் பரிசு, அவிநாசி அரசு கலைக்கல்லுாரி மாணவன் தரணிதரன், மூன்றாம் பரிசு பெற்றனர்.

முதல் பரிசு, 5,000 ரூபாய்; இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்; மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. போட்டிகளை, தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ, ஒருங்கிணைத்து நடத்தினார்.






      Dinamalar
      Follow us