sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேர் முகூர்த்தக்கால் பூஜை; சிவன்மலையில் கோலாகலம்

/

 தேர் முகூர்த்தக்கால் பூஜை; சிவன்மலையில் கோலாகலம்

 தேர் முகூர்த்தக்கால் பூஜை; சிவன்மலையில் கோலாகலம்

 தேர் முகூர்த்தக்கால் பூஜை; சிவன்மலையில் கோலாகலம்


ADDED : டிச 11, 2025 04:57 AM

Google News

ADDED : டிச 11, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா ஆண்டுதோறும், மூன்று நாட்கள் நடைபெறும்.

வரும் தைப்பூச தேர்த்திருவிழா பிப்., மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முதல் நிகழ்வாக தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க புனித நீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்களை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினர்.

காலை, 9:00 மணியளவில் முகூர்த்தகாலை படி வழியாக கொண்டு வரப்பட்டு ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, தேரின், நான்கு பக்கங்களிலும் முகூர்த்தக்கால் நட்டு பூஜை செய்யப்பட்டது. சுவாமி சன்னதியின் மூலவரில் உள்ள வேல் கொண்டு வரப்பட்டு, பின் மீண்டும் எடுத்து செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us