/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரிக்கு செல்ல பஸ்சும் இல்லை: மாணவர்கள் காத்திருக்க இடமும் இல்லை போக்குவரத்து கழகம் தான் கவனிக்கணும்
/
அரசு கல்லுாரிக்கு செல்ல பஸ்சும் இல்லை: மாணவர்கள் காத்திருக்க இடமும் இல்லை போக்குவரத்து கழகம் தான் கவனிக்கணும்
அரசு கல்லுாரிக்கு செல்ல பஸ்சும் இல்லை: மாணவர்கள் காத்திருக்க இடமும் இல்லை போக்குவரத்து கழகம் தான் கவனிக்கணும்
அரசு கல்லுாரிக்கு செல்ல பஸ்சும் இல்லை: மாணவர்கள் காத்திருக்க இடமும் இல்லை போக்குவரத்து கழகம் தான் கவனிக்கணும்
ADDED : அக் 03, 2024 08:00 PM

உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு, கல்லுாரி நேரத்துக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் என இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
உடுமலை நகரப்பகுதியிலிருந்து, 5 கி.மீ., துாரத்துக்கும் அதிகமான தொலைவில் கல்லுாரி அமைந்துள்ளது. அதே போல், கல்லுாரிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கும் மாணவர்கள் பஸ்சில் செல்கின்றனர். பொள்ளாச்சி, மடத்துக்குளம் பகுதிகளிலிருந்தும், மாணவர்கள் இக்கல்லுாரிக்கு வருகின்றனர். ஆனால், கல்லுாரி நேரத்துக்கு பஸ் போக்குவரத்து இல்லாததால், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்டிலிருந்து மலையாண்டிபட்டணம் வழியாக செல்லும் பஸ்கள், கல்லுாரி ஸ்டாப்களில் நிறுத்தப்படுகின்றன. ஆனால் கல்லுாரி துவங்கும் நேரத்துக்கும், முடியும் நேரத்துக்கும் கல்லுாரி வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
இதனால், போடிபட்டி வழிதடத்தில் இயங்கும் பஸ்களை பிடிப்பதற்கு, எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாப் வரை தொலைதுாரம் செல்கின்றனர்.
மலையாண்டிபட்டிணத்தில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பஸ்களும், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கல்லுாரி வழியாக இயக்கப்படுவதால், அதிகமான மாணவர்கள் அந்த பஸ்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பஸ்சில் அடித்துபிடித்து இடம் பிடித்து படிகட்டில் தொங்கல் பயணம் மேற்கொள்கின்றனர். மாணவியரால் இவ்வாறு ஏற முடியாததால், மீண்டும் சிலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், கல்லுாரி முன் மட்டுமே நிழற்கூரை உள்ளது. ஆனால் அங்கு பஸ்சிற்கு காத்திருப்பதில் பயணில்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் ஸ்டாப்களிலும் நிழற்கூரை வசதியும் கிடையாது.
இதனால் மழை நாட்களில் மாணவர்கள் காத்திருப்பதற்கும் இடமில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
கல்லுாரி மாணவர்கள் பஸ்சில் இடமில்லாமலும், பஸ்சிற்கு காத்திருப்பதற்கும் இடமில்லாமல் சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் கூறியதாவது:
கல்லுாரி நேரத்துக்கு பஸ் இயக்குவதற்கு, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் சிரமமில்லாமல் சென்று வரலாம். பலரும் தொலைதுாரத்திலிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பஸ்சுக்கும் காத்திருந்து, பஸ்சில் தொங்கிச்செல்வதால் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல், நிழற்கூரை வசதி இல்லை. மாணவர்கள் பஸ்சுக்கு காத்திருப்பதே ஒரு சவாலாகதான் உள்ளது.
இவ்வாறு, கூறினர்.