sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சன் "டிவி' சக்சேனாவை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி

/

சன் "டிவி' சக்சேனாவை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சன் "டிவி' சக்சேனாவை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சன் "டிவி' சக்சேனாவை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி


ADDED : ஆக 17, 2011 02:15 AM

Google News

ADDED : ஆக 17, 2011 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : காகித ஆலை மோசடி வழக்கில், சன் 'டிவி' நிர்வாக அதிகாரி சக்சேனா மற்றும் உதவியாளர் அய்யப்பனை, ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார்.உடுமலையை சேர்ந்த சீனிவாசன், தனக்கு சொந்தமான கருமத்தம்பட்டியிலுள்ள காகித ஆலையை, திருவல்லிக்கேணி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், சன் 'டிவி' நிர்வாக அதிகாரி சக்சேனா, உதவியாளர் அய்யப்பன் உட்பட எட்டு பேர் மிரட்டி பறித்துக் கொண்டதாக, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.வழக்கில் கைது செய்யப்பட்ட சக்சேனா மற்றும் அய்யப்பன், ஆக.,5ல் உடுமலை ஜே.எம்.1., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரும் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சக்சேனா, அய்யப்பன் இருவரையும், இவ்வழக்கில், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த 8ம் தேதி மனு தாக்கல் செய்தனர்; 10ம் தேதி நடந்த விசாரணையில், அய்யப்பன் மட்டும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருவரையும் இணைந்து விசாரிக்க விரும்புவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆக., 16ல் விசாரணையை மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்.நேற்று காலை 12.30 மணியளவில், ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் (பொ) ஷர்மிளா முன், இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும், மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சக்சேனா, அய்யப்பனை, ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார்






      Dinamalar
      Follow us