sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒன்றிய அலுவலக வளாகத்தில் அச்சுறுத்தும் கட்டடங்கள்

/

ஒன்றிய அலுவலக வளாகத்தில் அச்சுறுத்தும் கட்டடங்கள்

ஒன்றிய அலுவலக வளாகத்தில் அச்சுறுத்தும் கட்டடங்கள்

ஒன்றிய அலுவலக வளாகத்தில் அச்சுறுத்தும் கட்டடங்கள்


ADDED : நவ 22, 2024 10:59 PM

Google News

ADDED : நவ 22, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: 'உடுமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில், பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்டு, அச்சுறுத்தும் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்,' என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை ஒன்றிய நிர்வாக அலுவலகம் தளி ரோட்டில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது.அலுவலக வளாகத்தில், முன்பு, வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இம்மையத்துக்கான ஒட்டுண்ணி மையம் உள்ளிட்ட கட்டமைப்புகளும் இருந்தன. இந்நிலையில், ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்துக்கு, வேளாண் விரிவாக்க மையம் இடமாற்றப்பட்டது.

இதையடுத்து, ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்த கட்டடம், பயன்பாடின்றி, பாழடைந்து காணப்படுகிறது. அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது.

இதே போல், ஒன்றிய அலுவலக வளாகத்தில், 1994 - 95ம் ஆண்டில், ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நடமாடும் கிராமிய கால்நடை கிளை மருந்தக கட்டடம் கட்டப்பட்டது.

இத்திட்டமும் கைவிடப்பட்டு, கட்டடம் காட்சிப்பொருளாக மாறி, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி, விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியில் மக்கள் நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே, இடநெருக்கடியில், உடுமலை ஒன்றிய அலுவலகம் தவித்து வரும் நிலையில், பயன்பாடில்லாத கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும்; அப்பகுதியில், ஒன்றிய அலுவலகத்துக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாகியும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.






      Dinamalar
      Follow us