sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒட்டுப்போட்டே காலம் ஓடுது! மங்கலம் ரோடு கலங்குது

/

ஒட்டுப்போட்டே காலம் ஓடுது! மங்கலம் ரோடு கலங்குது

ஒட்டுப்போட்டே காலம் ஓடுது! மங்கலம் ரோடு கலங்குது

ஒட்டுப்போட்டே காலம் ஓடுது! மங்கலம் ரோடு கலங்குது


ADDED : பிப் 14, 2024 11:37 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மங்கலம் ரோடு பகுதியில், பல ஆண்டுகளாக ஒட்டுப்போடும் வேலை நடந்துவருவதால், புதிய தார்ரோடு அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூரில் இருந்து, மங்கலம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடு, பல இடங்களில் படுமோசமாக இருக்கிறது. குறிப்பாக, சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதி, குளத்துக்கடை பஸ் ஸ்டாப் முதல் குளத்துக்கடை பஸ் ஸ்டாப், அங்கிருந்து சேனா பள்ளம் வரையில், ரோடு மிக மோசமாக இருக்கிறது.

மாநகராட்சி பணிக்காக, ரோடு பலமுறை தோண்டப்பட்டது. ஒவ்வொரு முறையும், 'பேட்ஜ் ஒர்க்' மட்டும் செய்யப்பட்டது. சின்னாண்டிபாளையம் முதல், குளத்துக்கடை வரையிலும், கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் முதல் குளத்துக்கடை வளைவு வரையில், படுமோசமாக இருந்ததால், புதிய தார்ரோடு அமைக்கப்பட்டது. குடிநீர் குழாய் உடைப்பால், அப்பகுதியிலும் சேதமாகிவிட்டது.

நெடுஞ்சாலைத்துறை, மங்கலம் ரோடு பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; தொடர்ச்சியாக, 'பேட்ஜ் ஒர்க்' மட்டுமே செய்து கொண்டிருக்காமல், புதிய தார்ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு, மங்கலம் ரோட்டின் சில பகுதிகள், படுமோசமாக இருக்கின்றன. தொடர்ந்து, பல ஆண்டுகளாக 'பேட்ஜ் ஒர்க்' மட்டும் நடக்கிறது.

தெருவிளக்கு இல்லாத பகுதிகளில், 'டூ வீலரில்' செல்வதே பெரும் சவாலாக இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை மூலம், மிகவும் பழுதான இடங்களில் புதிய தார்ரோடு அமைக்க, மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழு உத்தரவிட வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us