sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்தது வெள்ளம்

/

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்தது வெள்ளம்

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்தது வெள்ளம்

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்தது வெள்ளம்


ADDED : நவ 28, 2024 03:06 AM

Google News

ADDED : நவ 28, 2024 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை திருமூர்த்தி மலை, பஞ்சலிங்கம் அருவி மற்றும் அமணலிங்கேஸ்னவரர் கோயிலை வெள்ள நீர் சூழ்ந்ததால், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

அதே போல், மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளி வரும், அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.

கனமழையால், தோணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அமணலிங்கேஸ்வரர் கோயில், கன்னிமார் கோயில், விநாயகர், முருகன் கோயில்கள் வரை வெள்ள நீர் ஓடி வருகிறது.

இதனால், பாதுகாப்பு கருதி, நேற்று காலை முதல், பக்தர்கள், சுற்றுலா பயணியர் கோயில் வளாகத்திற்குள் வராதபடி, தடுப்பு அமைத்து, கோயில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, திருமூர்த்திமலை பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையிலும், கோயில் மற்றும் பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.






      Dinamalar
      Follow us