sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்; அறிவுச் செல்வத்தை அள்ளிச் செல்ல அழைப்பு

/

திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்; அறிவுச் செல்வத்தை அள்ளிச் செல்ல அழைப்பு

திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்; அறிவுச் செல்வத்தை அள்ளிச் செல்ல அழைப்பு

திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்; அறிவுச் செல்வத்தை அள்ளிச் செல்ல அழைப்பு


ADDED : ஜன 23, 2025 12:25 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் வேலன் ஓட்டல் வளாகத்தில், 140 ஸ்டால்களுடன், 21வது புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது. வரும் பிப். 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 21வது புத்தக திருவிழா, காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில் இன்று துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் புத்தக கண்காட்சி அரங்குகளை திறந்துவைக்கின்றனர். எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 140 ஸ்டால்களில், 75க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின், ஆன்மிகம், வரலாறு, அரசியல், இலக்கியம், சிறுகதை, கவிதைகள் என, அனைத்து புத்தகங்களும் இடம்பெறுகின்றன. கண்காட்சியின் ஒருபகுதியாக தினமும் மாலை, 6:00 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்தவகையில், நாளை மாலை, 'நயம்பட உரை' தலைப்பில், சினிமா இயக்குனர் கரு. பழனியப்பன், 25ம் தேதி, 'எங்கோ, யாரோ, யாருக்காகவோ' தலைப்பில் பவா செல்லதுரையும், 'கற்க கசடற' தலைப்பில் பேராசிரியர் நசீராவும் பேசுகின்றனர்.

வரும், 26ம் தேதி, 'நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்' தலைப்பில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலசந்திரன்; 27 ம் தேதி, கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் 'தளையெலாம் தெரித்தழிக' எனும் தலைப்பில் கவியரங்கம். புத்தக கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட திறனாய்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா, வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் பேசுகின்றனர்.

வரும் 29ம் தேதி, தமிழ்ச் சங்கத்தின் பரிசளிப்பு விழா மற்றும் 'வையத் தலைமை கொள்' தலைப்பில் ஜெகத்கஸ்பர் பேசுகிறார். 30ம் தேதி, 'சிந்துவெளி நாகரிகம் - 100' தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனும், 'பக்கம் பக்கமாய் வாழ்க்கை' தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கமும் பேசுகின்றனர்; 31 ம் தேதி, தமிழக அரசின் திட்டக்குழு செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் அலிபாவா பேசுகின்றனர்.

அடுத்தமாதம் 1ம் தேதி, கவிஞர் ஜீவபாரதி, கவிஞர் மகுடேஸ்வரன், 2ம் தேதி ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சி தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us