sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோடுகளை உலக தரத்துக்கு மாற்றும் திட்டம் முடங்கியது

/

ரோடுகளை உலக தரத்துக்கு மாற்றும் திட்டம் முடங்கியது

ரோடுகளை உலக தரத்துக்கு மாற்றும் திட்டம் முடங்கியது

ரோடுகளை உலக தரத்துக்கு மாற்றும் திட்டம் முடங்கியது


ADDED : ஆக 05, 2011 12:40 AM

Google News

ADDED : ஆக 05, 2011 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் உள்ளிட்ட 10 நகரங்களில், உலகத்தரத்துக்கு சாலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின், தேர்தலை கருத்தில் கொண்டு, சாலை மேம்பாட்டு நிதியை, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களுக்கும் ஒதுக்கி, வீணாக்கி, திட்டத்தையே முடக்கியுள்ளது, கடந்த தி.மு.க., அரசு.தமிழகத்தில் உள்ள நகரங்களில் ரோடுகளை, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தரமானதாக மாற்றவும், மின் ஒயர், டெலிபோன் ஒயர், குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அனைத்தையும் நிலத்துக்கு அடியில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.மேலும், ரோட்டின் இருபுறமும் மக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை, சாலையோர பூங்கா, மின் விளக்கு, டிவைடர், சிக்னல், திருப்பங்கள் , 'சிசி டிவி' கேமரா என அனைத்து வசதிகளுடனும், வளரும் போக்குவரத்துக்கு ஏற்ற தரமான, அகல மான ரோடுகளாக மாற்றும் வகையில் உலக தரத்தில் சாலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய நகராட்சிகள், சேலம், திருச்சி, திருப்பூர் மாநகராட்சிகள் உள்ளடக்கிய 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இத்திட்டத்துக்காக, தனியார் நிறுவனங் கள் மூலம் ஆய்வும் செய்யப்பட்டது.உள்ளாட்சி நிர்வாகங்கள், மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் நிதி, இதற்காக ஒருங்கிணைக்கப்படும்; உலக தரத்தில் சாலை அமைக்கப்படும்; சிங்கப்பூர் நகர ரோடுகளுக்கு இணையாக தமிழக நகரிலுள்ள ரோடுகளும் மாற்றப்படும்; இதற்கான நிதியும் உடனடியாக ஒதுக்கப்படும் என அப்போதைய தி.மு.க., அரசு தெரிவித்து, உத்தரவும் வெளியிட்டது. இதற்காக, பெங்களூரு, மும்பை மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் கடந்தாண்டு ஆய்வு செய்யப்பட்டது.ஆனால், தேர்தல் நெருங்கியதும், அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநக ராட்சிகளுக்கு அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும்; உடனடியாக ரோடுகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. பெறப்பட்ட திட்ட மதிப்பீடு அடிப்படையில், உலக தரத்திலான சாலை மேம்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியை மாற்றம் செய்து, உடனடியாக டெண்டர் விட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தமிழக நகரங்களில் உள்ள ரோடுகள், படிப்படியாக உலக தரத்திலான ரோடுகளாக மாறும் என்ற நீண்ட காலம் பயனளிக்கும் திட்டம், குறுகிய கண்ணோட்டத்துடன், கடந்த ஆட்சி காலத்தில், அனைத்து நகரங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதுவும், வழக்கமான ரோடு போடவும், தரமில்லாமல், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் 'கமிஷன்' வாங்கவும், ஏற்கனவே நன்றாக இருந்த ரோடுகளை தோண்டி, வீணடிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தலை கருத்தில் கொண்டு, உலக தரத்திலான சாலை மேம்பாட்டு திட்ட நிதியை, கடந்த அரசு, அனைத்து நகரங்களுக்கும் பிரித்து வழங்கியது. இதன் காரணமாக, 10 நகரங்கள் படிப்படியாக தரமான நகரமாக மாறும் நீண்ட கால திட்டம் செயல்பாட்டுக்கு வராமலேயே, முடங்கி விட்டது,' என்றனர்.

மக்களுக்கு பயனளிக்கும் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட நீண்ட கால திட்டங் களை அறிமுகப்படுத்திய, தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, உலக தரத்திலான சாலை மேம்பாடு திட்டத்துக்கு மீண்டும் நிதி ஒதுக்கி செயல்படுத்த முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us