sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு

/

 சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு

 சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு

 சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு


ADDED : நவ 26, 2025 06:33 AM

Google News

ADDED : நவ 26, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழக சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூரை சேர்ந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் கூறியதாவது:

தமிழக அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், 8ம் தேதி சேலத்தில் மிக இளையோர் அணிக்கான தேர்வு நடைபெற்றது. அதில், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், ஏழு பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் கே.எஸ்.சி, அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர் தருண், தமிழக மிக இளையோர் சிறுவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தருண், நாளை (27ம் தேதி) முதல் 30ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறும், 35வது சப்-ஜூனியர் சிறுவர் தேசிய சேம்பியன் ஷிப் போட்டியில், தமிழக அணியில் பங்கேற்று விளையாட உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில அணிக்கு தேர்வு பெற்ற மாணவரை மாவட்ட கபடி கழக ேசர்மன் முருகேசன், தலைவர் மனோகரன், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுசாமி ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us