/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி தலைவர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்
/
ஊராட்சி தலைவர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்
ADDED : செப் 02, 2011 11:07 PM
திருப்பூர் : ஊராட்சி தலைவர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில், மாதம்தோறும் மதிப்பூதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராமங்களை உள்ளடக்கிய கிராம ஊராட்சிகளில் தலைவரும், வார்டு உறுப்பினர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படு கின்றனர். உறுப்பினர்களில் ஒருவர் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஊராட்சி நிர்வாக பணியை ஊராட்சி தலைவரே மேற்கொள்கிறார். அதற்கு உதவியாக, ஊராட்சி உதவியாளர் கள் பணியாற்றுகின்றனர். ஊராட்சி உதவியாளர் பணியிடங்களை, ஊராட்சி செயலாளர் என்று தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. மேலும், தற்போது பெறும் ஊதியத்தில் ஊக்கத்தொகையாக 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி தலைவர் களுக்கு, நிலையான படித்தொகையாக, மாதம் 500 ரூபாய் வழங்கப்படும்.
தற்போது, ஊராட்சி தலைவரின் சேவையை ஊக்குவிக்கும் வகையில், மதிப்பூதிய தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை மாதம் 500 ரூபாய் பெற்று வந்த ஊராட்சி தலைவர்கள், வரும் காலங்களில், மாதம் 1,500 ரூபாய் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டசபை பட்ஜெட் விவாத கூட்டத்தொடரில், ஊராட்சி உதவியாளர்களை செயலாளர்களாக உயர்த்தியதுடன், ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படுமென அரசு அறிவித்துள் ளது. அரசாணை மற்றும் நடைமுறை நிபந்தனை குறித்த அறிக்கையை பெற்றதும், உத்தரவு அமலுக்கு வரும்,' என்றார்.

