sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி

/

20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி

20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி

20 நாளாகியும் குடிநீர் சப்ளையில்லை : பாலாஜி நகர் பொதுமக்கள் அவதி


ADDED : செப் 02, 2011 11:15 PM

Google News

ADDED : செப் 02, 2011 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் :அம்மாபாளையத்தை அடுத்துள்ள ராக்கியாபாளையம் பாலாஜி நகர் பகுதியில் 20 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் செய்யாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம், பாலாஜி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; இப்பகுதிக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வழக்கமாக ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படும்.தற்போது 20 நாட்கள் கடந்தும், வினியோகத்தில் தாமதம் நீடிக்கிறது; குடிநீர் பற்றாக்குறையால் பெண்கள் அவதிப்படுகின்றனர். பகலில் வேலைக்கு செல்வோர், இரவில் டூவீலர்களில் குடங்கள், கேன்களை எடுத்துக் கொண்டு, மேல்நிலை தொட்டிகள் உள்ள பகுதிக்கு சென்று குடிநீர் கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



பகிர்மான குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதால், குடிநீர் வினியோகம் தாமதம் என கூறப்பட்டாலும், 20 நாட்களாகியும் சரி செய்யாமல் இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. பாலாஜி நகர் பகுதிக்கு, வாரம் ஒருமுறை குடிநீரும், இடைப்பட்ட நாட்களில் சப்பை நீரும் வினியோகிக்கப்படுகிறது; ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் உள்ளதால், அடுத்தமுறை குடிநீர் வரும் வரை பற்றாக்குறையே நீடிக்கிறது.பொதுமக்கள் புகார் தெரிவித்தால் மட்டும் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை வினியோகம் நீடிக்கிறது. தூங்கும்போது நள்ளிரவில், குடிநீர் வினியோகிப்பது பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாலாஜி நகர் பகுதிக்கு விரைவில் குடிநீர் வினியோகம் செய்யவும், வினியோகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து முறைப்படுத்தவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








      Dinamalar
      Follow us