/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை சந்தையில் ரூ.1.60 கோடிக்கு வர்த்தகம்
/
கால்நடை சந்தையில் ரூ.1.60 கோடிக்கு வர்த்தகம்
ADDED : ஜன 21, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அமராவதிபாளையத்தில், நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு, 791 மாடுகள் வரத்தாக இருந்தது.
இதில், கன்றுகுட்டி, 3,000 - 4,000 ரூபாய். காளை, 27 - 32 ஆயிரம், எருமை, 30 - 33 ஆயிரம், மாடு, 25 - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. வரத்து உயர்ந்த போது மாடுகளை வாங்க அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்ததால், கடந்த வாரத்தை விட கன்றுகுட்டி விலை, 500 ரூபாய் உயர்ந்தது.
காளை மாட்டின் விலை, ஆயிரம் ரூபாய் உயர்ந்தது. அதே நேரம் மாடு விலை, ஆயிரம் ரூபாய் குறைந்தது; எருமை விலையில் மாற்றமில்லை.
மொத்தம், 1.60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

