/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
/
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 02, 2026 05:57 AM
உடுமலை: பஸ் ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்கள் செல்லாமல் ரோட்டிலேயே நின்று செல்வதால், மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இந்த நகரம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், லாரிகள், கார், வேன்கள் செல்கின்றன. இதனால், இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன்பஸ்கள் தவிர, புறநகர் பஸ்கள் செல்வதில்லை. புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் இவ்வாறு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது விபத்துகளுக்கும் வழி வகுக்கிறது. இது குறித்து மக்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, அனைத்து பஸ்களும் பஸ்ஸ்டாண்டுக்குள் செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

