sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிளை நுாலகங்களில் பயிற்சி வகுப்பு; இளைஞர்கள் எதிர்பார்ப்பு

/

கிளை நுாலகங்களில் பயிற்சி வகுப்பு; இளைஞர்கள் எதிர்பார்ப்பு

கிளை நுாலகங்களில் பயிற்சி வகுப்பு; இளைஞர்கள் எதிர்பார்ப்பு

கிளை நுாலகங்களில் பயிற்சி வகுப்பு; இளைஞர்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 30, 2024 11:16 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : கிளை நுாலகங்களில், போட்டித்தேர்வுக்கான, பயிற்சி வகுப்புகள் நடத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், உடுமலையில், மாதிரி டிஜிட்டல் நுாலகம் மற்றும் 15க்கும் மேற்பட்ட கிளை நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நுாலகங்களை, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு, தயாராகும் இளைஞர்களுக்காக, முன்பு, இரு நுாலகங்களில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது, இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.

கிளை நுாலகங்களில், போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தினால், கிராமப்புற இளைஞர்கள் அதிகளவு பயன்பெறுவார்கள்.

குறிப்பாக, மடத்துக்குளம் தாலுகாவில், கணியூர், மடத்துக்குளம் உள்ளிட்ட கிளை நுாலகங்களில், இந்த பயிற்சி வகுப்புகளை, வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அப்பகுதி மாணவர்கள், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us