sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

/

'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 12, 2025 07:09 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2025 -- 2027ம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், எண்ணும், எழுத்தும் சார்ந்த, 2025 - 2026ம் கல்வியாண்டுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் (ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை); தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் (நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை) முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கியுள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறியதாவது:

தொடக்க கல்வியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை துாண்டுதல், குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தல்; கற்றல் அடைவுகளை குழந்தைகளை பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

விளையாடலாம் வாங்க, மின்னும் வைரங்கள், சொற்பொட்டியல் விரும்பிச் செய்வோம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us