sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் எரித்து கொலை

/

மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் எரித்து கொலை

மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் எரித்து கொலை

மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் எரித்து கொலை


ADDED : நவ 12, 2025 07:54 AM

Google News

ADDED : நவ 12, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி நகராட்சி, வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ், 63. இவர் அவிநாசி வட்டார பகுதிகளில், மரங்களை ஒப்பந்த அடிப்படையில் வெட்டி, விற்பனை செய்து வந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சின்னேரிபாளையம் பகுதியிலுள்ள குட்டை அருகே இவர் எரித்து கொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்த அவிநாசி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதற்கிடையில், சின்னப்பராஜை கொலை செய்ததாக, பூமணி, 42, என்ற பெண் அவிநாசி போலீசில் சரணடைந்தார்.

போலீசார் கூறியதாவது:

நடுவச்சேரியில், கணவனை இழந்த பூமணி, 42, என்ற பெண்ணுடன் சின்னப்பராஜ் பழகி வந்தார். பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவரை பூமணி கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு வலைய பாளையம் ரோட்டில் உள்ள குட்டைக்கு அருகில், பூமணியுடன் மது அருந்தினார். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த பூமணி, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், அவர் இறந்தார். நேற்று அதிகாலை, பூமணி சரண் அடைந்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us