sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓடைக் கரையில் மரக்கன்றுகள்சொட்டு நீர் வசதியுடன் அமைப்பு

/

ஓடைக் கரையில் மரக்கன்றுகள்சொட்டு நீர் வசதியுடன் அமைப்பு

ஓடைக் கரையில் மரக்கன்றுகள்சொட்டு நீர் வசதியுடன் அமைப்பு

ஓடைக் கரையில் மரக்கன்றுகள்சொட்டு நீர் வசதியுடன் அமைப்பு


ADDED : மார் 21, 2025 01:56 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஏ.பி.டி., ரோடு ஓடைக்கரையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பான முறையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, 43வது வார்டு ஏ.பி.டி., ரோட்டில், ஜம்மனை ஓடையின் ஒரு பகுதியில் கருவம்பாளையம் மின் மயானம் உள்ளது. ரோட்டரி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டு, பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இறந்தவர் சடலங்களை எரியூட்ட கொண்டு வரும் போது, மெத்தை, தலையணை, பாய் போன்றவையும், குப்பை கழிவுகளும் இவ்வளாகத்தைச் சுற்றிலும் வீசியெறியப்பட்டு, அலங்கோலமாக காட்சியளித்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில், வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வளாகம் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் வைத்து, சிமென்ட் குழாய்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பு ஏற்படுத்தி, அவற்றை பராமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் சாந்தாமணி கூறுகையில், ''மயானப் பகுதியில் வீசப்படும் மெத்தை பாய் போன்ற பொருட்களை துாய்மைப் பணியாளர்கள் அகற்றாமல் தவிர்த்து வந்தனர். அவற்றையும் விடு படாமல் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளால் மயான வளாகம் துாய்மையாக மாறி வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us