ADDED : பிப் 27, 2026 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில், பல்லடத்தில் என்.ஜி.ஆர்., ரோட்டில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, அனைத்துக் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நல்லகண்ணு உருவப் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. அருள்புரம் பகுதியிலும், அனைத்துக் கட்சி சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மெழுகுவர்த்தி ஏந்தியபடி, அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
திருமுருகன் பூண்டி நல்லகண்ணு மறைவுக்கு திருமுருகன்பூண்டி கம்யூ. கட்சி அலுவலகம் முன்பு, நல்லகண்ணு படத்துக்கு இந்திய கம்யூ. கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

