sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிரதான வழித்தடத்தில் குறுகிய பாலத்தால் அவதி

/

பிரதான வழித்தடத்தில் குறுகிய பாலத்தால் அவதி

பிரதான வழித்தடத்தில் குறுகிய பாலத்தால் அவதி

பிரதான வழித்தடத்தில் குறுகிய பாலத்தால் அவதி


ADDED : ஜன 05, 2025 10:18 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை, அமராவதி பிரதான கால்வாய் குறுகிய பாலத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை - கல்லாபுரம் ரோடு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லும் ரோடாகவும் உள்ளது.

இந்த ரோட்டில், கல்லாபுரம், செல்வபுரம் பகுதியில், அமராவதி பிரதான கால்வாய் குறுக்கே, 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது.

வாகன பெருக்கம், மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எதிரே வாகனம் வந்தால், காத்திருந்து கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மேலும், பழமையான இந்த பாலம், பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கனரக வாகனங்கள் சென்றால், பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பிரதான ரோட்டிலுள்ள, இந்த பாலத்திற்கு மாற்றாக, இரு வழித்தடத்துடன் புதிய பாலம் கட்ட வேண்டும், என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us