sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு

/

கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு

கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு

கன்டெய்னர்களுக்கு 'கடிவாளம்' லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு * விதிமுறைகளை மீறுவதால் கொதிப்பு


ADDED : ஜன 28, 2025 05:16 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஏற்றுமதி நிறுவனம் அளிக்கும் கடிதத்துடன், இறக்குமதி சரக்கு வரும் கன்டெய்னர் லாரிகளில், துறைமுகத்துக்கு சரக்கு அனுப்பி வைக்கும் முறைகேடு நடப்பதாக, திருப்பூரில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், கன்டெய்னர் லாரிகள் மூலம், துாத்துக்குடி துறைமுகம் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு, சுங்கவரித்துறை சரிபார்த்த பிறகு, மற்றொரு கன்டெய்னர் வாயிலாக, சரக்கு கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. கன்டெய்னர் லாரிகள் திருப்பூரில் இருந்து துறைமுகங்களுக்கு இயக்கப்படுகிறது. சுங்கவரித்துறை விதிமுறைகளின்படி, இறக்குமதி சரக்கை எடுத்துவரும் கன்டெய்னரில், திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்குகளை ஏற்றிச்செல்லக்கூடாது.

இறக்குமதி சரக்கை ஏற்றிவரும் லாரிகள், சரக்கை இறக்கிவிட்டு, மீண்டும் காலியான கன்டெய்னர்களுடன் தான் செல்ல வேண்டும்; அதற்கும் சேர்த்துதான், கட்டணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் ஒரு சில ஏற்றுமதியாளர்கள் இணைந்து, முறைகேடாக சரக்குகளை இதுபோன்ற கன்டெய்னர்களில் துறைமுகம் அனுப்பி வைக்கின்றனர்.

திருப்பூரில் அங்கீகாரம் பெற்ற கன்டெய்னர் லாரி தொழில், இதனால் பாதிக்கப்படுவதாக ஆட்சேபனை எழுந்தது. கன்டெய்னர் லாரி உரிமையாளர்களின் தொடர்ச்சியான நடவடிக்கையால், சுங்கத்துறை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 'இறக்குமதி சரக்கை கொண்டு வரும் லாரிகள், திரும்பி செல்லும் போது ஏற்றுமதிக்கான பார்சல்களை ஏற்றிச்செல்லக்கூடாது' என்ற திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் உத்தரவை காற்றில் விடுவது போல், மீண்டும் அத்தகைய முறைகேடாக சரக்கு போக்குவரத்து தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி நிறுவனத்தின் கடிதத்தை பெற்றுக்கொண்டு, இத்தகைய முறைகேடு தைரியமாக நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

காற்றில் 'பறக்கும்' உத்தரவு

திருப்பூரில் உள்ள ஒரு சில நிறுவனங்கள், ஏற்றுமதி செலவை குறைக்கலாம் என்ற எண்ணத்துடன், இத்தகைய விபரீதத்தை செய்கின்றன. 'எத்தகைய பாதிப்பு நடந்தாலும், நாங்களே பொறுப்பு' என்ற கடிதம் கொடுத்து, இறக்குமதி சரக்கு வரும் கன்டெய்னரில் முறைகேடாக சரக்கை அனுப்பி வைக்கின்றனர். அதாவது, விதிமுறைகளை மீறி குற்றம் செய்வதையும், தார்மீகமாக பொறுப்பேற்பது போல் செய்கின்றனர். திருப்பூரில் இருந்து, விதிமுறைகளை மீறி சரக்கு ஏற்றிச்செல்லும் லாரி மோதி விபத்து ஏற்பட்டாலும், பாதிக்கப்படும் மூன்றாவது நபர், காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு பெறமுடியாத சூழல் ஏற்படும். திருப்பூர் மாநகர போலீசார், இத்தகைய முறைகேட்டை கட்டுப்படுத்த வேண்டும். விபத்து ஏற்படும்பட்சத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. சுங்கவரித்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி, இறக்குமதி சரக்கு வரும் கன்டெய்னர்களில், மீண்டும் பின்னலாடைகளை ஏற்றி அனுப்பும் முறைகேட்டை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். - திருப்பூர் எக்ஸ்போர்ட் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள்








      Dinamalar
      Follow us