sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அறங்காவலர் நியமனப்பணி; பதவிக்காலம் முடிந்ததால் முடக்கம்

/

அறங்காவலர் நியமனப்பணி; பதவிக்காலம் முடிந்ததால் முடக்கம்

அறங்காவலர் நியமனப்பணி; பதவிக்காலம் முடிந்ததால் முடக்கம்

அறங்காவலர் நியமனப்பணி; பதவிக்காலம் முடிந்ததால் முடக்கம்


ADDED : மே 14, 2025 11:07 PM

Google News

ADDED : மே 14, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யும், மாவட்ட குழுவின் பதவிக்காலம் முடிந்ததால், புதிய அறங்காவலர் நியமன பணி முடங்கிப்போயுள்ளது.

மாவட்டம் வாரியாக, அறநிலையத்துறை கோவில்களுக்கு, அறங்காவலர் குழு நியமனம் செய்ய, தமிழக அரசால் மாவட்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது.

அக்குழுவினர், விண்ணப்பத்தை பரிசீலித்து, தகுதியான நபர்களை, தனி அறங்காவலர், மூன்று பேர் கொண்ட அறங்காவலர் குழு, ஐந்து பேர் கொண்ட குழுக்களை நியமித்தனர்.

கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., மாதம், மாவட்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் செயல்படும் அக்குழு, கடந்த பிப்., மாதத்துடன் கலைக்கப்பட்டது.

மாவட்டத்தில், 1,353 கோவில்கள் ஹிந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பில் உள்ளன. அவற்றில், மாவட்ட அறங்காவலர் குழுவால், அறங்காவலர் நியமனம் செய்யப்பட வேண்டியவை, 1,096 கோவில்கள். அவற்றில், 515 கோவில்களுக்கு மட்டும் அறங்காவலர் நியமனம் நடந்தது; அதுவும், கடந்த, 2023 ஏப்., மாதம் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு பதவி முடிந்தும்கூட, மற்ற கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடக்கவில்லை.

தகவல் கிடைத்து, விண்ணப்பித்தவர்களின் நிலை அதோகதிதான். மாவட்ட அறங்காவலர் குழு மீண்டும் செயல்பட்டால் மட்டுமே, மற்ற கோவில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் நடக்கும். அதன்படி, மாவட்ட அறங்காவலர் குழு நியமனத்துக்கான பணிகள் துவங்கியது.

கடந்த, பிப்., மாதம், அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதற்கு பிறகு எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இனிமேல் கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடப்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பக்தர்கள் சிலர் கூறுகையில், ''மாவட்ட அறங்காவலர் குழு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். மாவட்டத்தில், 50 சதவீத கோவில்களுக்கு மட்டும் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது; அவர்களின் பணிக்காலமும் நிறைவடையப்போகிறது. மீண்டும் மாவட்ட அறங்காவலர் குழுவை நியமிக்க, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர வேண்டும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us