sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கைரேகை, ஹெல்மெட் இல்லாமல் டூ-வீலரை ஸ்டார்ட் செய்ய முடியாது உடுமலை மாணவர்கள் கருவி தயாரிப்பு

/

கைரேகை, ஹெல்மெட் இல்லாமல் டூ-வீலரை ஸ்டார்ட் செய்ய முடியாது உடுமலை மாணவர்கள் கருவி தயாரிப்பு

கைரேகை, ஹெல்மெட் இல்லாமல் டூ-வீலரை ஸ்டார்ட் செய்ய முடியாது உடுமலை மாணவர்கள் கருவி தயாரிப்பு

கைரேகை, ஹெல்மெட் இல்லாமல் டூ-வீலரை ஸ்டார்ட் செய்ய முடியாது உடுமலை மாணவர்கள் கருவி தயாரிப்பு


ADDED : ஜூன் 05, 2025 02:26 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:இருசக்கர வாகன விபத்துகளை தடுக்கும் புதிய கருவியை, உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக் -- மோட்டார் வெகிக்கிள் தொழிற்பிரிவு இரண்டாமாண்டை சேர்ந்த பேச்சிமுத்து, கதிரேசன் ஆகிய இரு மாணவர்கள், இருசக்கர வாகனங்களின் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், புதிய கருவியை, 'நெக்ஸ் - ஜென் வெகிக்கிள் டிவைஸ்' என்ற பெயரில் வடிவமைத்துள்ளனர்.

கட்டாயம் ஸ்கேன்


இந்த கருவியை உருவாக்கியுள்ள மாணவர்கள் கூறியதாவது:

இந்த கருவியை இருசக்கர வாகனத்தில் பொருத்துவதால், வாகன உரிமையாளர்களின் கைரேகை மூலம் தான் வாகனத்தை இயக்க முடியும். ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் ஸ்கேன் செய்த பிறகே ஓட்ட முடியும். தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வாகனம் இயங்கும்.

மது அருந்தியிருந்தால் வாகனம் இயங்காது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பின் போது, இந்த வாகனத்தை நிறுத்தாமல் செல்ல இயலாது. வாகனத்தை யாராவது திருடிச் சென்றால், ஜி.பி.எஸ்., உதவியுடன் அதை தடுக்க முடியும்.

உதவி


பயிற்றுநர்கள் உமா சந்திரன், சேகர் ஆகியோர், இந்த கருவியை வடிவமைக்க வழிகாட்டினர். மேலும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நதி சந்திரன், பயிற்சி அலுவலர் ரமேஷ் எங்களை ஊக்குவித்து, கருவி வடிவமைப்பதற்கான உதவிகளை வழங்கினர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us