sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுதந்திர போராட்டத்துக்கு துப்பாக்கி; வரலாறு பேசும் உடுமலை நடுகற்கள்

/

சுதந்திர போராட்டத்துக்கு துப்பாக்கி; வரலாறு பேசும் உடுமலை நடுகற்கள்

சுதந்திர போராட்டத்துக்கு துப்பாக்கி; வரலாறு பேசும் உடுமலை நடுகற்கள்

சுதந்திர போராட்டத்துக்கு துப்பாக்கி; வரலாறு பேசும் உடுமலை நடுகற்கள்


ADDED : ஏப் 20, 2025 11:51 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : 'பாளையக்காரர்களின் சுதந்திர போராட்டத்துக்கு தேவையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் உடுமலை பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது, நடுகற்களால் உறுதியாகியுள்ளது' என, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பண்ணைக்கிணறு, திருமூர்த்திமலை, மெட்ராத்தி, கடத்துார் உள்ளிட்ட இடங்களில், பழமையான நடுகற்கள் உள்ளன. இவற்றில் உள்ள புடைப்பு சிற்பங்களை, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அக்குழுவினர் கூறியதாவது:

உடுமலையில் கண்டறியப்பட்ட பெரும்பாலான நடுகல் புடைப்பு சிற்பங்களில், துப்பாக்கி இடம் பெற்றுள்ளது. இதனால், ஆங்கிலேயருக்கு எதிரான போரில், இப்பகுதியின் முக்கிய பங்களிப்பு தெரிய வருகிறது.

கி.பி., 1800ம் ஆண்டை சேர்ந்த இந்த நடுகற்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், தளி உள்ளிட்ட பாளையக்காரர்கள் போரிட்டதும், இதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள தளிஞ்சியில் துப்பாக்கி தயாரிப்பதற்கான தொழிற்சாலை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.

விருப்பாட்சி கோபால நாயக்கர் தலைமையிலான தீபகற்ப கூட்டணிக்கு, உடுமலை தளிஞ்சி மலைப்பகுதியில் இருந்து 'துவக்கு' எனப்படும் துப்பாக்கிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆங்கிலேய படை கம்பெனிகள், அமராவதிநகரில் நிரந்தரமாக தங்கியிருந்தது, ஆவணங்களில் தெரிய வந்து உள்ளது.

பாளையக்காரர்கள் வீழ்ச்சிக்கு பின், இந்த சிலைகளுக்கு ஆங்கிலேயர்களால் ஆபத்து ஏற்படும் என்பதால், நடுகல் சிற்பங்களை பதுக்கி வைத்து, கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

கோவில் புனரமைப்பு மற்றும் நாட்டார் வழிபாடுகளால், இச்சிலைகள் தற்போது வெளியே வரத்துவங்கியுள்ளன. துப்பாக்கியுடன் கூடிய சில பழங்கால சிற்பங்கள், திருமூர்த்திமலை கட்டுமான பணிகளின் போது கிடைத்தன.

பாளையக்காரர்களின் சுதந்திர போராட்டத்துக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்த முக்கிய பகுதியாக, உடுமலை இருந்துள்ளது. இத்தகைய தரவுகளை சேகரித்து, தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்து, நடுகற்களை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us