sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பராமரிப்பில்லாத வி.ஏ.ஓ., அலுவலகங்கள்! அதிருப்தியில் மக்கள்

/

பராமரிப்பில்லாத வி.ஏ.ஓ., அலுவலகங்கள்! அதிருப்தியில் மக்கள்

பராமரிப்பில்லாத வி.ஏ.ஓ., அலுவலகங்கள்! அதிருப்தியில் மக்கள்

பராமரிப்பில்லாத வி.ஏ.ஓ., அலுவலகங்கள்! அதிருப்தியில் மக்கள்


ADDED : பிப் 07, 2025 08:34 PM

Google News

ADDED : பிப் 07, 2025 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பராமரிப்பின்றி தள்ளாடி வரும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களை புதுப்பிக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

உடுமலை தாலுகாவுக்குட்பட்ட, பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வருவாய் உள்வட்டங்களில், 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களின் வி.ஏ.ஓ.,அலுவலகத்துக்கு, நிரந்தர கட்டடங்கள் இல்லை.

இதனால், ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள, கட்டடங்களில், வி.ஏ.ஓ., அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களின் நிர்வாகத்துக்கு முக்கிய ஆதாரமான, இந்த அலுவலக கட்டடங்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில்உள்ளது.

உதாரணமாக, பெதப்பம்பட்டி உள்வட்டம், விருகல்பட்டி கிராம வி.ஏ.ஓ., அலுவலகம், மரிக்கந்தையில் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டடத்தின் மேற்கூரை சிதிலமடைந்து, ஆங்காங்கே கான்கிரீட் பூச்சு உதிர்ந்து வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலையில் தான் கட்டடம் உள்ளது.

அனிக்கடவு வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டடம், ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளது.

இந்த அலுவலக கட்டடமும், போதிய பராமரிப்பின்றி, மேற்பகுதியில் விரிசல் விட்டு காணப்படுகிறது. குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்வட்டத்திலுள்ள பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலகங்கள் பராமரிப்பின்றியே உள்ளது.

கிராமங்களின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் இந்த கட்டடங்களில், மழைக்காலத்தில், பல்வேறு சிரமங்களை, மக்களும் அலுவலர்களும் சந்தித்து வருகின்றனர்.

எனவே, வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களை புதுப்பிக்க, ஊரக வளர்ச்சி முகமை அல்லது வருவாய்த்துறை நிதி திட்டங்களின் கீழ் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us