sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விரிவாக்கம் செய்யப்படாத பாலங்கள் போக்குவரத்துக்கு இடையூறு

/

விரிவாக்கம் செய்யப்படாத பாலங்கள் போக்குவரத்துக்கு இடையூறு

விரிவாக்கம் செய்யப்படாத பாலங்கள் போக்குவரத்துக்கு இடையூறு

விரிவாக்கம் செய்யப்படாத பாலங்கள் போக்குவரத்துக்கு இடையூறு


ADDED : டிச 19, 2024 11:34 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பாசன கால்வாய்கள் மீது கட்டப்பட்ட பாலங்கள், நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது; போக்குவரத்துக்கு ஏற்ப பாலங்களை விரிவுபடுத்த வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை பகுதியில், தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் மற்றும் கிராமப்புற ரோடுகளின் குறுக்கே, பாசன கால்வாய்கள் அமைந்துள்ளன.

குறிப்பாக, பி.ஏ.பி., பாசன திட்டத்தின் பிரதான, கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள், ரோடுகளில், குறுக்கிடும் இடத்தில், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஆனால், இப்பாலங்கள் பாசன திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போது, அப்போதிருந்த, ரோட்டின் அகலத்துக்கேற்ப கட்டப்பட்டவையாகும்.

அதன்பின்னர், ரோடுகள் பல மடங்கு விரிவுபடுத்தப்பட்ட பிறகும், பாலங்கள் அதற்கேற்ப மேம்படுத்தப்படவில்லை.

தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்ட பிறகு, எஸ்.வி., மில் வாய்க்கால் பாலம் உட்பட பாலங்கள், நீண்ட இழுபறிக்குப்பிறகு, விரிவாக்கப்பட்டது. ஆனால், கிராமப்புற ரோடுகளில், இப்பாலங்களை இரு துறையினரும் கண்டுகொள்வதில்லை.

தடுப்புச்சுவர் இடிந்தும், குறுகலான பகுதியில், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பி.ஏ.பி., பூலாங்கிணறு, புதுப்பாளையம், உடுமலை ஆகிய வாய்க்கால்களின் குறுக்கே, மேம்படுத்தப்படாமல், 25க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. ஒன்றிய ரோடுகளிலுள்ள, பாலங்களிலும், இதே நிலை காணப்படுகிறது.

விபத்துகளை குறைக்க, ரோட்டின் அகலத்துக்கேற்ப, பாலங்களை விரிவுபடுத்த வேண்டும். உடனடி நடவடிக்கையாக சேதமடைந்துள்ள தடுப்பு சுவர்களையாவது சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையினர், ஒன்றிய நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து பணிகளை துவக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us