/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் தொடரும் சீருடை பிரச்னை ;சரியான அளவுகளில் வழங்க வலியுறுத்தல்
/
அரசு பள்ளிகளில் தொடரும் சீருடை பிரச்னை ;சரியான அளவுகளில் வழங்க வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் தொடரும் சீருடை பிரச்னை ;சரியான அளவுகளில் வழங்க வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் தொடரும் சீருடை பிரச்னை ;சரியான அளவுகளில் வழங்க வலியுறுத்தல்
ADDED : மே 13, 2025 11:48 PM
உடுமலை : புதிய கல்வியாண்டில், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் சீருடைகள், சரியான அளவுகளில் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியாண்டு தோறும், மாணவர்களுக்கு இலவச சீருடைகள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.ஒரு கல்வியாண்டுக்கு நான்கு'செட்'கள் வழங்கப்படுகிறது. சீருடைகள் முழுமையாக வடிவமைத்து தான் வழங்கப்படுகிறது.
அதுவே, அவற்றை பயன்படுத்த முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது. மாணவர்களின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில், சீருடைகள் இருப்பதில்லை. கை கால்களை நுழைக்க முடியாதபடி சிறியதாகவும், சிறிய உடல்வாகுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பெரிய அளவிலும் உள்ளது.
பெரியதாக உள்ள சீருடைகளை, ஆசிரியர்கள் சரிபார்த்து குழந்தைகளின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து வழங்குகின்றனர். ஆனால், சிறியதாக அமைந்து விடும் சீருடைகளை, மாற்றவும் முடியாமல், வீணாகிறது.
இதனால், பெற்றோர் மீண்டும் புதிய சீருடைகளை வாங்க வேண்டியுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், சீருடைகள் சரியான அளவுகளில் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்பிரச்னை தொடர்ந்து நடக்கிறது.
புதிய கல்வியாண்டில் சீருடை பிரச்னைகள் இல்லாமல் இருப்பதற்கு, கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். பெற்றோர் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படுவதில், தொடர்ந்து குளறுபடிதான் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் மாணவர்களுக்கு அளவு எடுத்துதான் வடிவமைப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் சரியாக இருப்பதில்லை. இம்முறையும் அவ்வாறு நிகழாமல் இருப்பதை கல்வித்துறை தான் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு பொருந்தாத சீருடைகளை மாற்றி, அவர்களுக்கு ஏற்ப வழங்குவதற்கும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.