sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பதிவு வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு

/

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பதிவு வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பதிவு வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பதிவு வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு


ADDED : ஏப் 03, 2025 08:37 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் பதிவு செய்ய, ஏப்.,15 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்யுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

இதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறுவதற்கு, அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்து, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையில், தமிழகத்தில், வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்களையும் இணைக்கும் வகையில், வேளாண் துறை சார்பில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

மேலும், இ - சேவை மையங்களிலும், பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, கடந்த மார்ச் 30க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், கால அவகாசம் நீடிக்கப்பட்டு, ஏப்.,15 க்குள் விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற்றால் மட்டுமே, பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் ( பி.எம்.,கிஷான்), பயிர்க்காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் விவசாயிகள் எளிதாக பயன் பெற முடியும்.

எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களுக்கு நேரடியாக வரும், வேளாண் அலுவலர்கள், தன்னார்வலர்கள் அல்லது பொது சேவை மையங்களில், தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார், மொபைல் எண் ஆகிய விபரங்களை அளித்து, எந்த வித கட்டணமும் இல்லாமல், வரும், 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

உடுமலை, மடத்துக்கும், குடிமங்கலம் பகுதிகளில், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us