sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன்

/

 பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன்

 பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன்

 பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன்


ADDED : டிச 08, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதையில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் இந்த ஸ்டேஷனில் நிற்பதில்லை.

போதிய பயணியர் வருகை இல்லாததால், அந்த ரயில்வே ஸ்டேஷன் சமூக விரோத செயல்கள் மையமாக மாறி வருகிறது. அங்குள்ள குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது; காலி மதுபாட்டில்கள் அப்பகுதி முழுவதும் கிடக்கிறது. கழிப்பிடமும் பயன்பாட்டில் இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டத்துக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us